Wednesday, February 22, 2012

மகரம்: மார்ச் 1 - 15 ராசி பலன்கள்

மகரம்: (உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2) அடுத்தவரின் உணர்வுகளையும் உணரும் மகர ராசி வாசகர்களே இரண்டாமிடத்தில் சூரியன், மூன்றில் புதன், நான்காமிடத்தில் சந்திரன், குரு, சுக்கிரன், ஐந்தாமிடத்தில் கேது, எட்டாமிடத்தில் செவ்வாய், பத்தாமிடத்தில் ராசிநாதன் சனி, லாபஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வீற்றிருக்கிறார்கள். 12ம் தியதி புதன் கும்பத்திற்கும், 14ம் தியதி அஷ்டமாதிபதி சூரியன் மீனத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

மூன்றுக்கும் ஐந்துக்கும் ஏழுக்கும் உடையவர்கள் நான்கில் அமர ராசியாதிபதி பத்தில் இருக்க உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.  குடும்பஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சூர்யன் அமர அவரை செவ்வாய் பார்ப்பது சரியல்ல. குடும்பத்தில் சின்ன சின்ன குழப்பங்கள் வந்து வந்து மறையும். எனினும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குரு சந்திர யோகத்தால் பாராட்டும் புகழும் கிடைக்கும். பிள்ளைகளின் மீது தனி கவனம் தேவை. சிலருக்கு பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம்.

வாகன வசதிகள் பெருகும். தாய்க்காக எந்த தியாகத்தையும் செய்து அதற்கான அங்கீகாரத்தை பெறுவீர்கள். மூன்றில் இருக்கும் புதனால் சகோதர சகோதரிகளிடையே பாசப் பிணைப்பு அதிகரிக்கும். கல்வி சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு அதற்கான பாராட்டுதல்கள் பரிசுகளை ஆகியவற்றைப் பெறுவீர்கள். லாபத்தில் இருக்கும் ராகுவினால் இயந்திரம் சம்பந்தமான வியாபாரத்தில் செல்வம் பெருகும்.

சிலருக்கு பரம்பரை தொழிலில் லாபம் கிடைக்கும். உலக வாழ்க்கை, ஆன்மீக வாழ்க்கை இரண்டிலும் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் வளர்ச்சியினால் உங்கள் தந்தை சந்தோஷம் அடைவார். மன நல ஆலோசகர்களாக இருப்பவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். குறிப்பாக மருத்துவ தொழிலில் இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.

கலைஞர்கள் ரசிகர்களால் போற்றப்படுவார்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு பெரிய பொறுப்புகள் வந்து சேரும். மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுதல்களும் கிடைக்கும்.

சந்திராஷ்டம் தினங்கள்: மார்ச் 07, 08, 09

பரிகாரம்: சூரிய ஆராதனையும், சுப்பிரமணிய ஆராதனையும் செய்யுங்கள்.

No comments: