Wednesday, February 22, 2012

விருச்சிகம்: மார்ச் 1 - 15 ராசி பலன்கள்

விருச்சிகம்:  ( விசாகம் 4, அனுஷம், கேட்டை) எதிலும் நேர்படப் பேசும் விருச்சிக ராசி வாசகர்களே ராசியில் ராகு, நான்காமிடத்தில் சூரியன் ஐந்தாமிடத்தில் புதன், ஆறாமிடத்தில் சந்திரன், குரு, சுக்கிரன், ஏழாமிடத்தில் கேது, பத்தாமிடத்தில் செவ்வாய், பன்னிரெண்டாமிடத்தில் சனி என கிரக அமைப்பு உள்ளது. 12ம் தியதி  புதன் கும்பத்திற்கும், 14ம் தியதி கர்மாதிபதி சூரியன் மீனத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

ராசிநாதன் செவ்வாய் பத்தாமிடத்தில் அமர்ந்திருந்து ராசியைப் பார்க்கிறார். தனஸ்தானத்தை குரு பார்க்கிறார். எனவே தடை பட்டிருந்த காரியங்கள் அனைத்தும் இனிதே நடைபெறும். ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் அகலும். பொருள்வளம் சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் தொடரும். தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும். இனிமையாக பேசுவதில் வல்லவரான நீங்கள் காரியங்களை சாதித்து கொள்வீர்கள்.

தன வாக்கு குடும்ப பூர்வ புண்ணியஸ்தானாதிபதி குரு குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நண்பர்கள் உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். பயணங்களால் பயன் கிடைக்கும். வங்கிகளில் சேமிப்புகள் உயரும். விலையுயர்ந்த ஆடைகள் ஆபரணங்களை வாங்குவீர்கள்.

ராசியாதிபதி பத்தில் இருப்பதால் தெய்வ காரியங்களில் கவனத்தை செலுத்துவீர்கள். பெற்றோரின் உடல்நிலை சீராக இருக்கும். உறவினர்களிடம் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். நிலம் வீடு சம்பந்தமாக உள்ள முயற்சிகள் கைகூடும். பெண்களால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு நிரந்தமாகும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி அடைவார்கள்.

சந்திராஷ்டம தினங்கள்: மார்ச் 01, 02, 03

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்மன் தரிசனம் செய்யுங்கள்.

No comments: