Wednesday, February 22, 2012

சிம்மம்: மார்ச் 1 - 15 ராசி பலன்கள்

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1 ) எடுத்த காரியத்தில் உறுதியாக இருக்கும் சிம்ம ராசி வாசகர்களே ராசியில் செவ்வாய், மூன்றில் சனி, நான்கில் ராகு, ஏழில் ராசிநாதன் சூரியன், எட்டாமிடத்தில் புதன், ஒன்பாதமிடத்தில் சந்திரன், குரு, சுக்கிரன், பத்தாமிடத்தில் கேது என கிரக நாயகர்கள் அமர்ந்துள்ளனர். 12ம் தியதி தன வாக்கு குடும்ப லாபாதிபதி புதன் கும்பத்திற்கும், 14ம் தியதி ராசிநாதன் சூரியன் மீனத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

ராசிநாதன் ஏழில் வீற்றிருக்க, ராசியை குரு பார்க்க தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறும். பெரும் பொருள்வரவை எதிர்பார்க்கலாம். எட்டாமிடத்தில் உள்ள புதனாலும் ஒன்பதாமிடத்தில் உள்ள கிரக சேர்க்கையாலும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த செல்வம் உங்களிடம் வந்து சேரும். விலகிச் சென்ற சொந்த பந்தங்கள் உங்களிடம் வந்து சேர்வர். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

நான்காம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதாலும், ஒன்பாதமிடத்தில் சந்திரன் சஞ்சரிப்பதாலும் பெற்றோர்களின் ஆரோக்கிய விஷயங்களில் கவனம் தேவை. உடன்பிறப்புகள் இடையே பாசப் பிணைப்பு அதிகரிக்கும். பேசும் பேச்சில் இனிமையும் நளினமும் அதிகரிக்கும். வீர தீர விளையாட்டுகளில் பாராட்டப்படுவீர்கள். பயணங்களினால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளுக்கு எதிர்பார்த்திருந்த வெளிநாடு பயணம் கைகூடி வரும். திருமணக் கனவுகள் நனவாகும்.

ஐந்திற்குரியவர் ஒன்பதில் இருப்பதினால் புகழ் பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அரசாங்க வழக்குகளை சிலர் சந்திக்க வேண்டி வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வியாபார முன்னேற்றத்தை முன்னிட்டு சிலர் வெளிநாடு பயணம் செல்வர். புது முயற்சிகளில் வெற்றி பெற நண்பர்கள் உதவுவர்.

கலைத் துறையில் உள்ளவர்களுக்கு திசை மாறிச் சென்ற வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அரசியலில் பொறுப்புகள் மாறும். மாணவர்களுக்க்கு படிப்பில் சற்று கூடுதல் கவனம் தேவை.

சந்திராஷ்டம தினங்கள்: இல்லை

பரிகாரம்: செவ்வாய்கிழமைகளில் திருமுருகனை வழிபடவும். தினமும் கந்த ஷஷ்டி கவசம் பாராயணம் செய்யவும்.

No comments: