Wednesday, February 22, 2012

மிதுனம்: மார்ச் 1 - 15 ராசி பலன்கள்

மிதுனம்: (மிருகசீரிஷம் 3, 4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2 ,3ம் பாதம்) - எதிலும் நிதானத்தை கடைபிடிக்கும் மிதுன ராசி வாசகர்களே மூன்றில் செவ்வாய், ஐந்தாமிடத்தில் சனி, ஆறாம் இடத்தில் ராகு, ஒன்பதாமிடத்தில் சூரியன், பத்தாமிடத்தில் ராசிநாதன் புதன், பதினொன்றில் சுக்கிரன், வியாழன், சந்திரன், பன்னிரெண்டில் கேதுவுமாக கிரக நாயகர்கள் வீற்றிருக்கின்றனர். 12ம் தியதி ராசிநாதன் புதன் கும்பத்திற்கும், 14ம் தியதி சூரியன் மீனத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

மூன்றில் செவ்வாய் உலவுவது சிறப்பில்லாமல் இருந்தாலும் சுகம், பாக்கியம், தொழில், லாபம் ஆகியவை நன்றாக உள்ளன. லாபஸ்தானத்தில் குரு சந்திர யோகம் உண்டாவதால் பொருள் வரவில் குறைவு ஏற்பட வாய்ப்பு இல்லை. எனினும் குடும்பத்தில் சிறு சிறு பிணக்குகள் வந்து மறையும். கோபம் கலந்த வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நன்று.

ஆறாமிடத்து அதிபதியாகிய செவ்வாய் மூன்றில் அமர்ந்து ஆறைப் பார்ப்பதாலும், ஆறாமிடத்தில் ராகு இருப்பதாலும் நெஞ்சு சம்பந்தப்பட்ட சிறு சிறு உபாதைகள் தோன்றலாம். எனினும் கவனம் தேவை. ராசிநாதன் பத்தில் உலவுவதால் உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். இசையில் உள்ள திறமையை காட்டுவதற்கு மிக சரியான காலகட்டமிது. உங்கள் திறமை பளிச்சிடும். ஆன்மீக, மத நம்பிக்கைகள் அதிகரிக்கும். பேச்சுதிறமையால் வழக்குகளில் வெற்றிகள் காண்பீர்கள். தாயாரின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் நல்ல லாபம் பெறலாம்.

கலைத் துறையினர் பெரும் பொருள் ஈட்டுவர். அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பர்.

சந்திராஷ்டம தினங்கள்: இல்லை

பரிகாரம்: ஸ்ரீ மகாவிஷ்ணூவையும், கணபதியையும் வழிபடுங்கள். பசுவுக்கு ஆகாரம் தாருங்கள்.

No comments: