Wednesday, February 22, 2012

தனுசு: மார்ச் 1 - 15 ராசி பலன்கள்

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) எதிலும் தெய்வநம்பிக்கையுடன் போராடும் தனுசு ராசி வாசகர்களே மூன்றாமிடத்தில் சூரியன், நான்காமிடத்தில் புதன், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன், ராசிநாதன் குரு, சுக்கிரன், ஆறாமிடத்தில் கேது, ஒன்பதாமிடத்தில் செவ்வாய், பதினொன்றில் சனி, பன்னிரெண்டாமிடத்தில் ராகு என கிரகங்கள் பவனி வருகிறார்கள். 12ம் தியதி சப்தம கர்மாதிபதி புதன் கும்பத்திற்கும், 14ம் தியதி பாகியஸ்தானாதிபதி சூரியன் மீனத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

ராசிநாதனின் பார்வை, தன குடும்பஸ்தானாதிபதியின் பார்வை என அனைத்து விதங்களிலும் நன்மைகளையே பெறும் காலகட்டத்தில் இருக்கிறீர்கள். சுப காரியங்களுக்கான வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல் வாங்கலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். கவனம் தேவை.

பாக்கியஸ்தானம் வலிமை பெறுவதால் தந்தையின் தொழில் வளம் பெருகும். குடும்ப பிரச்ச்னைகளும் முடிவுக்கு வரும். வெளிவட்டாரப் பழக்கங்கள் நன்மையை தரும். நற்செய்திகள் உங்களை தேடி வரும். உடன்பிறப்புகள் அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள். அவர்களுக்காக சில தியாகங்களையும் செய்வீர்கள்.

நான்குக்கு உடையவர் ஐந்தில் இருப்பதால் வீடு நில புலன்கள் உங்களை வந்தடையும். அதிலுள்ள பிரச்சனைகளும் தீரும். குழந்தைகளின் கல்வி, நடத்தை மிகவும் நன்றாக இருக்கும். ஐந்தில் குருவும், ஆறில் கேதுவும் இருப்பதால் பொன் பொருள் ஆபரண சேர்க்கை உண்டு. வியாபாரிகள் வெளிநாட்டு பயணம் செல்வார்கள்.

கலைதுறையினர் அயல்நாடு செல்வார்கள். அரசியலில் நல்ல வாய்ப்புகள் தேடி வரலாம். மாணவர்கள் போட்டிகளில் பரிசுகள் வாங்குவார்கள்.

சந்திராஷ்டம தினங்கள்: மார்ச் 04, 05, 06

பரிகாரம்: அனுமனை வணங்குங்கள். ஷஷ்டி தோறும் குமரனை வணங்குங்கள்.

2 comments:

சாம் ஆண்டர்சன் said...

Thanks Thalaivaa

தமிழ்மணி said...

நீண்ட இடைவெளி விட்டுவிட்டிர்கள்?

புதிய பதிவுகள் அனைத்தும் அருமை, பயனுள்ளதாக அமைந்தது