Tuesday, April 9, 2013

விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 03 - மேஷ ராசி பலன்கள்

மேஷம்:

அசுபதி, பரணி, கார்த்திகை-1ம் பாதம் மற்றும் சு, சொ, சோ, சை, ல, லீ, லு, லோ, அ, ஆ ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.

மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், மரியாதை கொடுக்கும் மேஷ இராசி வாசகர்களே! நீங்கள் எதிலும் அறிவார்ந்து செயல்படுபவர். வெளிவட்டாரப் பழக்கங்களை விரும்பும் தாங்கள் ஒரு சிறந்த பண்பாளர். வார்த்தைகளில் நிதானம் மிக்கவர். தேவை இல்லாத இடங்களில் கருத்து கூற மாட்டீர்கள். யாரும் கேட்டால் மட்டுமே உதவி செய்வீர்கள். அதிலும் உடல் ஊனமுற்றோருக்கு அள்ளி வழங்குவீர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம்:
கிரகநிலை:
இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசியில் கேதுவும், ராசிக்கு  7ம் இடத்தில் சனியுடன் ராகுவும் இருக்கிறார்கள். தனவாக்கு குடும்பஸ்தானத்தில் குரு மே மாதம் 27-ம் தேதிவரையிலும் பின்  தைரியவீர்யஸ்தானத்திற்கும் மாறுகிறார். 

இனி பலன்களைப் பார்க்கலாம்.
நல்ல செயல்களைச் செய்து சிறப்படைவீர்கள். உங்கள் பெயரும், புகழும் வளரும். குடத்துக்குள் இட்ட விளக்காய் செயலாற்றி வந்த நீங்கள் வெளியுலகில் அறியப்படுவீர்கள். சமுதாயத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். குறுகிய வட்டத்தில் இருந்த நீங்கள் உங்கள் செயல்களை விரிவுபடுத்துவீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். அரசாங்க அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். விஞ்ஞானப் பூர்வமாக யோசித்து முடிவெடுப்பீர்கள். பொதுச் சேவை செய்யும் சங்கங்களில் அங்கத்தினர் ஆவீர்கள். தடைபட்டிருந்த விஷயங்கள் மடமடவென்று நடந்தேறும். சகோதர, சகோதரிகளுடன் விட்டுக்கொடுத்துப் பழகுவீர்கள். மற்றபடி எந்தக் காரியத்திலும் அவசரம் வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை. வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். அனாவசிய பயணங்களைத் தவிர்க்கவும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆலய திருப்பணிகளில் முக்கியப் பொறுப்புகளைப் பெறுவீர்கள்.  உங்களின் செயல்களை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். அனைத்து விஷயங்களையும் உங்களின் நேர்பார்வையிலேயே வைத்துக்கொள்ளவும்.  சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். போட்டிகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். பயணங்களால் அளவான பலன் கிடைக்கும். குழந்தைகள் புதிய முன்னேற்றத்தைக் காண்பார்கள். நண்பர்களைக் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்களுக்குக் கீழ் பணியாற்றுபவர்களின் சிறப்பான ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். உங்களின் செயல்கள் நீங்கள் அறியாமலேயே மற்றவர்களுக்கு நன்மையாக அமைந்துவிடும். உங்களின் தகுதியை உணராமல் உங்களின் செயல்களில் குறை காண்பவர்களையும், தவறாக உங்களை விமர்சனம் செய்பவர்களையும் கண்டு கொள்ள வேண்டாம். பெற்றோரின் நல்லாதரவு உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்களின் வேலைகளை தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகமாகும். உங்கள் வேலைகளுக்கு உரிய அங்கீகாரத்தை மேலதிகாரிகள் வழங்குவார்கள். சக ஊழியர்கள் சற்று தள்ளியே இருப்பார்கள். அவர்களை உங்களின் அமைதியான குணத்தால் அனுசரித்து நடந்துகொள்வீர்கள். மனதில் இருந்த ஒருவித பயம் நீங்கி தெளிவாகக் காரியமாற்றுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும். கூட்டாளிகள் உங்களிடம் நட்போடு பழகுவார்கள்.  வியாபாரத்தைப் பெருக்க புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள். உங்களின் வியாபார யுக்திகள் சரியான இலக்குகளை சென்றடையும். சிறிய முதலீடுகளில் பெரிய வருமானத்தைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு தானியப் பொருட்களின் உற்பத்தியில் நல்ல பலன் கிடைக்கும். விவசாய உபகரணங்களை வாங்கி மேலும் முன்னேற்றம் அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்யும்  ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். பாசன வசதிகளை மேம்படுத்திக்கொள்ள செலவு செய்ய நேரிடும். சந்தைகளில் போட்டி பொறாமைகளையும் சந்திக்க நேரிடும். ஆனாலும் பொறுமையுடன் செயல்பட்டு நல்ல விலைக்குப் பொருட்களை விற்பனை செய்வீர்கள். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்துவீர்கள். அரசியல்வாதிகள் சமுதாயப் பணி செய்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவீர்கள். இதனால் கட்சி மேலிடத்தின் பாராட்டு கிடைக்கும். தொண்டர்கள் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள். உங்களின் எண்ணங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். கலைத்துறையினர் துறையில் உள்ள நுணுக்கங்களை அறிந்து வைத்துக்கொள்வீர்கள். அவற்றை தகுந்த சமயத்தில் உபயோகித்து வெற்றி பெறுவதற்கு ஏதுவான சூழ்நிலை உண்டாகும். இதனால் பாராட்டுகளும், கௌரவமும் கிடைக்கும். இந்த ஆண்டு உழைப்பை கூட்டிக்கொண்டு செயல்படவும். மற்றபடி புதிய வாய்ப்புகள் தடங்கல் இல்லாமல் வந்துகொண்டிருக்கும். ரசிகர்களின் ஆதரவுடன் சில பயணங்களைச் செய்வீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். உங்கள் கடமையை சரியாகச் செய்யுங்கள். ஆன்மிகத்தில் மனதைச் செலுத்துங்கள். மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு நல்ல முறையிலேயே கிடைக்கும். உடல் ஆரோக்யம் வலுப்பெற சில எளிமையான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறூம் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வரவும். முடிந்தவர்கள் அருகிலிருக்கும் அறுபடை ஸ்தலங்களுக்குச் சென்று வாருங்கள். 
சொல்ல வேண்டிய மந்திரம்: ’கந்த ஷஷ்டி கவசம்’ அன்றாடம் பாராயணம் செய்வது. “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லுங்கள். உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறும்.
மலர் பரிகாரம்: “செவ்வரளி” மலரை ஏதேனும் கோவிலில் அருள்பாலிக்கும் முருகனுக்கோ அல்லது அம்மனுக்கோ சாத்திவர குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

No comments: