Friday, October 11, 2013

முருகன் செய்திகள் - பாகம் 01

நம் அனைவருக்கும் தெரிந்தது ஈரோடு சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில்.






அத்தலத்தின் சிறப்புகள்:
  • இத்திருக்கோவில் சுமார் 3000 வருடங்கள் பழமை வாய்ந்தது. 
  •  சித்தர்களுள் ஒருவரான பின்நாக்கு சித்தர் வாழ்ந்து முக்திய்டைந்த திருத்தலம்.
  •  ஸ்ரீஅருணகிரிநாதரின் திருப்புகழ் பாடப்பெற்று முருகப்பெருமானால் படிக்காசு வழங்கப் பெற்ற திருத்தலம்.
  •  ஸ்ரீபாலன் தேவராய ஸ்வாமிகளால், ஸ்ரீகந்தர் சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட திருத்தலம் 
  •  12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தானாகவே பொங்கி வழியும் மாமாங்க சுணை அமைந்துள்ள திருத்தலம் 
  •  வளர்பிறை சஷ்டி திருநாளில் விரதம் கடைபிடிப்போர் குழந்தைப்பேறு பெற்று வரும் திருத்தலம் 
  •  மூலவர் தினசரி அபிஷேகத்திற்கு எருதுகள் மூலம் படிவழியே திருமஞ்சனம் கொண்டு வரும் சிறப்பு பெற்ற திருத்தலம் 
  •  மூலவர் செவ்வாயாக அமைந்து மூலவரை சுற்றி நவக்கிரகங்கள் எட்டு நவக்கிரஹகங்களும் அழகிய தேவ கோஷ்டத்தில் பாங்குடன் அமைந்திருக்கும் திருத்தலம் 
  •  ஸ்ரீவள்ளி, ஸ்ரீதேவசேனா தேவியர் இருவரும் ஒரே கல்லில் பிரபையுடன் அமைக்கப்பட்டு தனிக்கோவிலாக வீற்றிருப்பது வேரெங்கும் காண முடியாதது.

No comments: