Tuesday, October 8, 2013

நவராத்திரி வழிபாட்டு முறை நான்காம் நாள் - தொடர் 5

நவராத்திரி வழிபாட்டு முறை - நான்காம் நாள்



அம்பாள்    வைஷ்ணவி


உருவ அமைப்பு    சங்கு சக்கரம் கதை வைத்திருப்பவள், தீயவற்றை அழிப்பவள். வாகனம்: கருடன் (சிலர் காக்கை என்றும் கூறுவர்)


குணம்    சௌம்யம்


சிறப்பு    ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அம்சம்


நெய்வேத்யம்    எலுமிச்சை சாதம், பானகம்


பூஜை செய்ய உகந்த நேரம்    காலை 10.30 - 12.00, மாலை 6 – 7.30


மலர்    மல்லிகை


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்    9 அல்லது 11


பாட வேண்டிய ராகம்    காம்போதி


யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்    பூசம், அனுஷம், உத்திரட்டாதி


திசை புத்தி நடப்பவர்கள்    செவ்வாய் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள்    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் செவ்வாய் அல்லது சனி இருப்பவர்கள்


விசேஷம்        மங்களகாரியங்கள் நம் வீட்டில் எந்த விதமான தடங்கலும் இன்றி நடைபெற இன்று விரதம் இருத்தல் நன்று


சொல்ல வேண்டிய பாடல்:

[1]    உறைகின்ற நின் திருக்கோயிலில் நின்கேள்வர் ஒருபக்கமோ
       அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம்
       நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சமோ
       மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே


[2] மூல மந்திரம்:  ஓம் - ஹ்ரீம் - யம் - வம் -வைஷ்ணவ்யை - நம :


[3] காயத்ரி: ஒம் ச்யாம வர்ணாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை தீமஹி த்ன்னோ வைஷ்ணவீ ப்ரசோத்யாத் !!

No comments: