Thursday, October 10, 2013

நவராத்திரி வழிபாட்டு முறை - ஆறாம் நாள் - தொடர் 7


நவராத்திரி வழிபாட்டு முறை - ஆறாம் நாள்


அம்பாள் கௌமாரி


உருவ அமைப்பு மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள்.


குணம் சௌம்யம்


சிறப்பு ஸ்ரீமுருகனின் அம்சம்


நெய்வேத்யம் தேங்காய் சாதம், தேங்காய் பால்


பூஜை செய்ய உகந்த நேரம் காலை 9 - 10.30, மாலை 6 – 7.30


மலர் செவ்வரளி


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள் 7

பாட வேண்டிய ராகம்
காவடி சிந்து


யார் யாரெல்லாம் வணங்க வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள் அசுபதி, மகம், மூலம்


திசை புத்தி நடப்பவர்கள் குரு திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள் லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் குரு அல்லது செவ்வாய் இருப்பவர்கள் விசேஷம் சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.

எண் கணிதப்படி வணங்க வேண்டியவர்கள்: பெயர் எண் 9ல் பிறந்தவர்கள்


சொல்ல வேண்டிய பாடல்:


[1] பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!

[2] மூல மந்திரம்: ஓம் - சிம் - கௌமாரியை - நம :


[3] காயத்ரி: ஓம் சிகித் வஜாயை வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹி தந்நோ: கௌமாரி ப்ரசோதயாத்

No comments: