Saturday, October 12, 2013

ஐப்பசி மாத ஆன்மீக ஜோதிட குறிப்புகள்

ஐப்பசி மாத ஆன்மீக ஜோதிட குறிப்புகள்


ஐப்பசி மாத சுப முகூர்த்த நாட்கள்





ஐப்பசி மாத ஆன்மீகக் குறிப்புகள்


தேதி  -  ஆங்கில தேதி -   விசேஷங்கள்
தேய்பிறை நாட்கள்       
1    18-10-2013    பௌர்ணமி விரதம், சந்தாண கோபால விரதம், மஹா அன்னாபிஷேகம், துலாஸ்நானம் ஆரம்பம், மாத பிறப்பு தர்ப்பணம்


4    21-10-2013    கார்த்திகை விரதம், சந்திரோதய கௌரி விரதம், உமாவிரதம், சிதம்பரம் ஸ்ரீசிவகாமி அம்மன் கொடியேற்றம்
 

5    22-10-2013    சங்கடஹர சதுர்த்தி
 

6    23-10-2013    கரிநாள்
 

7    24-10-2013    சஷ்டி
 

10    27-10-2013    அஷ்டமி
 

11    28-10-2013    வாஸ்து
 

13    30-10-2013    ஏகாதசி
 

15    1/11/2013    பிரதோஷம், சிவராத்திரி பின்னிரவு நரகசதுர்த்தசி ஸ்நானம்
 

வளர்பிறை நாட்கள்       
16    2/11/2013    தீபாவளி, போதாயன அமாவாசை
 

17    3/11/2013    கேதார கௌரி விரதம், அமாவாசை லக்ஷ்மி பூஜை, கந்த ச்ஷ்டி உற்சவம் ஆரம்பம், விரதம் ஆரம்பம்
 

18    4/11/2013    சந்திர தரிசனம், கேவர்த்தன பூஜை
 

20    6/11/2013    கரிநாள்
 

21    7/11/2013    நாகசதுர்த்தி
 

22    8/11/2013    ஸ்கந்த சஷ்டி, சூரஸம்ஹாரம், சஷ்டி விரதம்
 

24    10/11/2013    அஷ்டமி
 

25    11/11/2013    திரேதாயுகாதி
 

27    13/11/2013    ஏகாதசி
 

29    15/11/2013    காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் அன்னாபிஷேகம்



ஐப்பசி மாத கிரகநிலை:



கேது

குரு

ஐப்பசி மாத கிரகநிலை


செவ்

சுக்கி
சூரி  ராகு
சனி புதன்



ஐப்பசி 7       கன்னி         புதன்(வக்ரம்)
ஐப்பசி 14  -    தனுசு      -    சுக்கிரன்
ஐப்பசி 17  -    துலாம்     -    புதன்



ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் பொது பலன்கள்: 

கிரகநிலை: ஐப்பசி மாதம் பிறந்த அனைவருக்கும் சூரியன் துலாம் ராசியில் இருப்பார். அவர் நீசமாக இருப்பார். சித்திரை 3, 4, ஸ்வாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நக்ஷத்ர கால்களில் ஒன்றில் இருப்பார். பாகையைப் பொறுத்தவரை 180 டிகிரி முதல் 210 டிகிரியில் இருப்பார். பொதுவில் சூரியனுக்கு துலாம் ராசி என்பது பகை வீடு, ஏனென்றால் அவர் இங்குதான் நீசம் ஆகிறார். இருப்பினும் உள்ளே டிகிரி வாரியாக சென்று ஆராயும் போது அவரின் நிலையை அறியலாம்.
சித்திரை நக்ஷத்ரக்கால் 3ல் வாங்கியிருந்தால் (பாதசாரம் பெற்றிருந்தால்) சூரியன் சுப பலன்களைத் தருவதில் சிக்கல்கள் ஏற்படும்.
சித்திரை நக்ஷத்ரக்கால் 4ல் வாங்கியிருந்தால் (பாதசாரம் பெற்றிருந்தால்) சூரியன் சுப பலன்களைத் தருவார்.
ஸ்வாதி நக்ஷத்ரக்கால் 1 அல்லது 4 வாங்கியிருந்தால் (பாதசாரம் பெற்றிருந்தால்) சூரியன் நன்மைகளைத் தருவார். .
ஸ்வாதி நக்ஷத்ரக்கால் 2 அல்லது 3 வாங்கியிருந்தால் (பாதசாரம் பெற்றிருந்தால்) சூரியன் சுப பலன்களைத் தருவதில் சிக்கல்கள் ஏற்படும்.
விசாகம் நக்ஷத்ரக்கால் 1 அல்லது 3 வாங்கியிருந்தால் (பாதசாரம் பெற்றிருந்தால்) சூரியன் சுப பலன்களை அள்ளித் தருவார்.
விசாகம் நக்ஷத்ரக்கால் 2 வாங்கியிருந்தால் (பாதசாரம் பெற்றிருந்தால்) சூரியன் சுப பலன்களைத் தருவதில் சிக்கல்கள் ஏற்படும்.

 
புதனின் நிலை:
 
பொதுவில் புதன் சூரியனுடைய பாகைக்கு 8 பாகைக்குள் மட்டுமே வித்தியாசமாக பயணம் செய்வார். எனவே புதனுடைய இருப்பையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. புதனுக்கு துலாம் ராசி நட்பு வீடு. எனவே அவர் சுப பலன்களையேத் தருவார், இருப்பினும் இவருக்கும் நாம் நக்ஷத்ர பாத வாரியாக பார்க்கலாம்.
ஸ்வாதி 4ம் பாதம் தவிர வேறு எந்த பாதத்தில் நின்றாலும் புதன் நன்மையைத் தருவார். இருப்பினும் அவருடன் யார் யார் இருக்கிறார்கள், யாருடைய பார்வை பெற்றிருக்கிறார், ஆதிபத்தியம் போன்றவற்றைப் பொறுத்து மாறும்.


குறிப்பு: இங்கு நாம் கொடுத்திருப்பது பொதுப்பலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும்.
அரசாங்க மூலம் நன்மைகளை ஜாதகர் அடைவார். நல்ல குணம், புத்தி, பொறுமை, அறிவு, புகழ் ஆகியவற்றைக் கொண்டிருப்பார். சகல விதமான சம்பத்துகளையும் பெறுவார். எதிர் பால் ஈர்ப்பு, வாசனைத் திரவியங்கள் மேல் பிரியம், இரக்க குணம், தாய் வழி உறவினர்கள் மேல் அபிமானம், பல்வேறு மக்களால் போற்றப்படுபவர். மண வாழ்க்கையில் திருப்தி ஏற்படும்.
7 - 9 - 10 - 12 - 19- 28 - 37 - 55 ஆகிய வயதுகள் முக்கியமான வயதுகள். அக்னி, வாந்தி பேதி, தண்ணீர் ஆகியவைகளால் கண்டம் ஏற்படலாம்.

சூரியன், சனி, ராகு சேர்க்கை:

குறிப்பு: இங்கு நாம் கொடுத்திருப்பது பொதுப்பலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். 
வீட்டில் வசிக்கும் ஆண் குழந்தைகள் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் கொண்டிருப்பார்கள். தந்தை மகனிடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் இருக்கும். பிள்ளைகள் சோம்பேறிகளாக இருப்பார்கள். ஆனால் நல்ல வேலையில் இருப்பார்கள். தந்தையாருக்கு அரசாங்கம் சார்ந்த தொழில் கிடைக்க வாய்ப்புள்ளது. குழந்தைகள் அடிக்கடி மருத்துவ செலவுகள் இருக்கும். விஷ ஜந்துக்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும். எப்போதும் எளிமையையே விரும்ம்புவார்கள். வாழ்க்கைத்துணைவரால் அதிகமாக விரும்பபடுபவராக இருப்பார்கள். இவர்களின் தோற்றத்தை வைத்து எடை போடுபவர்கள் ஏமாந்து போவார்கள்.

 
ஐப்பசி மாதத்திற்கான 27 நக்ஷத்ரகாரர்களுக்கான பிரத்யேக பொது பலன்கள்:


அசுபதி:
பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும்.


பரணி:
கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்தும் கூடும். குழந்தைகளின் கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும்.

கார்த்திகை:
அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி மாத இறுதியில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தேவையான சரக்குகளை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும்.


ரோகினி:
குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன்மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியம் சுபகாரியங்கள் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும்.

மிருகசீரிஷம்:
எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும். வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். அவர்களை அனுசரித்து செல்வது நன்மையைத் தரும்.

திருவாதிரை:
தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது. எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம்.

புனர்பூசம்:
உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவை. எதைப் பேசுவதற்கு முன்னும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும்.

பூசம்:
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்படுத்தினாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை.

ஆயில்யம்:
எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும். தொழிலில் வெற்றி பெற திட்டமிட்டு காரியங்களைச் செய்வது நல்லது. தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும்.

மகம்:
நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது.

பூரம்:
கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது.


உத்திரம்:
மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள்.

ஹஸ்தம்:
உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும்.


சித்திரை:
எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.  எதிர்ப்புகள் அகலும். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும்.

சுவாதி:
தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன்மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும்.


விசாகம்:
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும். எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும்.


அனுஷம்:
அறிவு திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும். எல்லா விதத்திலும் நன்மையை தரும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.


கேட்டை:
தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம்.



மூலம்:
உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை. அக்கம்பக்கத்தினரிடம் பழகும்போது கவனம் தேவை. இல்லற சண்டைகள் ஏற்படலாம். எச்சரிக்கை அவசியம். திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும்.



பூராடம்:
எல்லா நன்மைகளும் உண்டாகும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாரத உதவியால் நன்மை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.


உத்திராடம்:
வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பணவரத்து திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம். கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள்.



திருவோணம்:
கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் கருத்து வேற்றுமை நீங்கி மீண்டும் நட்பு பாராட்டுவாக்ரள். மனதில் புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளிபோடுவது நல்லது. வாழ்க்கைத்துணையுடன் ஆலோசனை செய்வது மனகுழப்பத்தை போக்கும். காரிய வெற்றி உண்டாகும்.

அவிட்டம்:
எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பது தாமதமாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பதும் நல்லது. பணவரத்து எதிர்பார்த்த நேரத்தை விட தாமதமாக வந்து சேரும். ஆனால் பூர்வீக சொத்துக்களில் இருந்து பிரச்சனைகள் தீரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளை கையாளும் போது கவனம் தேவை. பாக்கிகள் வசூலாவது தாமதமாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது.

ஸதயம்:
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன்மூலம் அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம். இந்தவாரம் எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.


பூரட்டாதி:
எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்வது நல்லது. பணவரத்து தாமதமாகலாம். நண்பர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. புதிய காரியங்களை தள்ளிபோடுவதும் எதிலும் கவனமாக இருப்பதும் நல்லது. மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.


உத்திரட்டாதி:
கெட்ட கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும். தொழில் வியாபாரம் மெத்தனமாக காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி வியாபாரம் செய்வது நல்லது. போட்டிகளை கண்டு கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.

ரேவதி:
கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம். யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரியதாமதம் உண்டாகலாம் கவனம் தேவை.

No comments: