Friday, October 11, 2013

நவராத்திரி வழிபாட்டு முறை எட்டாம் நாள் - தொடர் 9

நவராத்திரி வழிபாட்டு முறை - எட்டாம் நாள்


அம்பாள்    ஸ்ரீநரஸிம்ஹி



 




உருவ அமைப்பு    மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கரம் கொண்டவள். சிம்ம வாகனம்


குணம்    குரூரம் (சத்ருக்களை )


சிறப்பு    ஸ்ரீநரஸிம்மரின் அம்சம்


நெய்வேத்யம்    சர்க்கரைப் பொங்கல், பானகம், விடாப்பருப்பு


பூஜை செய்ய உகந்த நேரம்    காலை 10.30 - 12.00, மாலை 6 – 7.30


மலர்    துளஸி, மரிக்கொழுந்து, பச்சிலை


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்    8


பாட வேண்டிய ராகம்    காம்போதி


யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்    கார்த்திகை, உத்திரம், உத்திராடம்


திசை புத்தி நடப்பவர்கள்    சனி திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள்    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சனி அல்லது கேது இருப்பவர்கள்


விசேஷம்        சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுவிப்பவள்

எண் கணிதப் படி யாரெல்லாம் வணங்க வேண்டும்: பெயர் எண் 8 உடையவர்கள்


சொல்ல வேண்டிய பாடல்:

[1]    ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,
       காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு
       சாத்தும்குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்
       நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே.


[2] மூல மந்திரம்:  ஓம் - ஸ்ரீம் - நரஸிம்யை - நம :


[3] காயத்ரி:  ஓம் நரசிம்மாய வித்மஹே வஜ்ர நாகாய தீமஹி தன்னோ நரசிம்மி பிரசோதயாத்!

No comments: