Saturday, October 5, 2013

நவராத்திரி வழிபாட்டு முறை இரண்டாம் நாள் - தொடர் 3


நவராத்திரி வழிபாட்டு முறை
இரண்டாம் நாள்


அம்பாள்

வராஹி


உருவ அமைப்பு
பன்றி முகம், தெத்துப் பற்கள், சூலம் உலக்கை தாங்கியவள், பெரிய சக்கரத்தைக் கொண்டிருப்பவள், தனது தெத்துப் பற்களால் பூமியை தாங்கியிருப்பவள்
குணம்
குரூரம்
சிறப்பு
ஸ்ரீஅன்னையின் சேனாதிபதி
நெய்வேத்யம்
தயிர்சாதம், பாயாசம்
பூஜை செய்ய உகந்த நேரம்
காலை 9 – 10.30, மாலை 6 – 7.30
மலர்
முல்லை
கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்
9
பாட வேண்டிய ராகம்
கல்யாணி
யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:
வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்
திருவாதிரை, ஸ்வாதி, ஸதயம்
திசை புத்தி நடப்பவர்கள்
சூரியன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்
ஜாதக அமைப்பு உடையவர்கள்
லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சூரியன் அல்லது ராகு இருப்பவர்கள்
விசேஷம்
தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்பட இன்று விரதம் இருத்தல் நலம்
சொல்ல வேண்டிய பாடல்:
[1]    துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
   பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - பனி மலர்ப் பூங்
   கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
   அணையும், திரிபுர சுந்தரி - ஆவது அறிந்தனமே!
[2] மூல மந்திரம்:  ஓம் - க்லீம் - வராஹி - ஹூம்பட் - நம:
[3] காயத்ரி: ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத்!

No comments: