Saturday, October 12, 2013

நவராத்திரி வழிபாட்டு முறை ஒன்பதாம் நாள் - தொடர் 10

நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்

அம்பாள்    ஸ்ரீபிராஹ்மி 

உருவ அமைப்பு    அன்ன வாகனம், கையில் ஏடு, ஜெபமாலை, கமண்டலம் கொண்டவள். நான்கு முகம் உடையவள்.


குணம்    சௌம்யம்


சிறப்பு    ஸ்ரீபிரும்மாவின் அம்சம்


நெய்வேத்யம்    சர்க்கரைப் பொங்கல், சுண்டல், பால் பாயாசம்


பூஜை செய்ய உகந்த நேரம்    காலை 9 - 10.30, மாலை 6 – 7.30


மலர்    மல்லிகை, செம்பருத்தி, கேந்தி


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்    11


பாட வேண்டிய ராகம்    கானடா, குறிஞ்சி


யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்    ரோகினி, ஹஸ்தம், திருவோணம்


திசை புத்தி நடப்பவர்கள்    சூரியன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள்    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சூரியன் அல்லது ராகு இருப்பவர்கள்


விசேஷம்        வித்யாதாரிணி -  கல்வி, வித்தைகளுக்கு அதிபதி

எண் கணிதப் படி யாரெல்லாம் வணங்க வேண்டும்: பெயர் எண் 1 உடையவர்கள்


சொல்ல வேண்டிய பாடல்:

[1]    தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா
        மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
        இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
         கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
  


[2] மூல மந்திரம்:  ஓம் - சிம் - பிராஹ்மயே - நம :


[3] காயத்ரி:  ஓம் தேவி பிராம்யை வித்மஹே மஹா சக்த்யைச தீமஹி தந்தோ தேவி பிரசோதயாத்!

No comments: