Sunday, October 6, 2013

நவராத்திரி வழிபாட்டு முறை மூன்றாம் நாள் - தொடர் 4

நவராத்திரி வழிபாட்டு முறை - மூன்றாம் நாள்


அம்பாள்:    இந்திராணி (மாஹேந்திரி, சாம்ராஜ்யனி)


உருவ அமைப்பு:    கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள்.


குணம்:   சௌம்யம்


சிறப்பு:    ஸ்ரீஇந்திரனின் சக்தி, தேவலோகத்தை பரிபாலனம் செய்பவள்


நெய்வேத்யம்:    வெண்பொங்கல், வெண் பாயாசம்


பூஜை செய்ய உகந்த நேரம்:    காலை 9 – 10.30, மாலை 6 – 7.30


மலர்:    மல்லிகை


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்:    9 அல்லது 11


பாட வேண்டிய ராகம்:    ஆனந்த பைரவி


யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்:    புனர்பூசம், விசாகம், பூரட்டாதி


திசை புத்தி நடப்பவர்கள்:    சந்திரன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள்:    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சந்திரன் அல்லது ராகு இருப்பவர்கள்


விசேஷம்:        உத்தியோகம், தொழிலில் மேன்மை ஏற்பட இன்று விரதம் இருத்தல் நலம்


சொல்ல வேண்டிய பாடல்:

[1]    மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
    குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்
    பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
    புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.

[2] மூல மந்திரம்:  ஓம் - ஹ்ரீம் - இம் - வம் -இந்திராணியை - நம :


[3] காயத்ரி: ஓம் கஜத்வஜாயை வித்மஹே வஜ்ரஹஸ்தாயை தீமஹி தந்நோ இந்த்ராணி ப்ரசோதயாத்

No comments: