Monday, September 30, 2013

நவக்கிரஹங்களை வழிபடும் முறைகளும் ஸ்லோகங்களும் - தொடர் 2


நவக்கிரகம் எனப்படுவது:
[1] சூரியன்
[2] சந்திரன்
[3] செவ்வாய்
[4] புதன்
[5] குரு
[6] சுக்கிரன்
[7] சனி
[8] இராகு
[9] கேது

மேற்கண்டவைகளில் முதல் ஏழும் ஸப்த கிரகங்கள் என்று அழைக்க்படுகிறது. பின்னாளில் சாயாக்கிரகங்கள் என்று அழைக்கப்படும் இராகு கேது ஆகியோர் இணைக்கப்பட்டார்கள். எனவே இவை நவக்கிரகம் ஆயிற்று.

சாயா என்றால் வடமொழியில் நிழல் என்பதாகும். இவ்வாறு அழைக்கபட இன்னோரு முக்கிய காரணம் உண்டு. இந்த கிரகங்களுக்கு என சுய ஆதிபத்தியம் கிடையாது. ஒரு ஜாதகத்தில் எத்தனையாவது வீட்டில் அமர்ந்து இருக்கிறார்களோ அந்த வீட்டின் அதிபதி ஆதிபத்தியத்தை முழுவதுமாக இவர்களே வழங்குவார்கள். இந்த பலன்களை இரட்டிப்பானவை. இவர்கள் நன்மை தீமை ஆகியவற்றைப் பற்றி சிந்திப்பதில்லை.

நவக்கிரகங்கள் எப்படி உலா வருகின்றனர்?
நவக்கிரகங்களில் சூரியன் முதல் சனி வரை உள்ள ஸப்த கிரகங்கள் பிரதட்சினமாகவும்(Clockwise) ராகு கேதுக்கள் அப்பிரதட்சினமாகவும் (Anti-Clockwise) உலா வருகின்றனர்.

ஆலயங்களில் நவக்கிரகம் இருக்க வேண்டிய இடம்?

ஆலயங்களில் பொதுவாக நவக்கிரகமானது வடகிழக்கு மூலையான ஈசானுயத்தில்தான் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என சிற்ப சாஸ்திரம், ஆகமங்கள் ஆகியவை தெரிவிக்கின்றன.

பிரதிஷ்டை:

நவக்கிரகங்களைப் பொதுவாக இரண்டு விதமான முறைகளில் பிரதிஷ்டை செய்வார்கள்.

அவை
[1] சிவாகம பிரதிஷ்டை
[2] வைதீகப் பிரதிஷ்டை

நம் நாட்டில் அதிகபட்சமாக சிவாகம பிரதிஷ்டை முறையில்தான் நவக்கிரகங்கள் ஸ்தாபிதம் செய்யப்படுகின்றனர்.

இன்றைய ஸ்பெஷல்
நவக்கிரக கோலங்கள் – சூரியன்

சிவாகம பிரதிஷ்டை என்றால் என்ன?



தொடரும்.....

No comments: