ஜெனன காலத்தில் சந்திரன் பலப்பட்டு இருந்தால் மன அமைதி உண்டாகும். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். விதவிதமான ஆடைகள், ஆபரணங்கள் வந்து சேரும். வீடு மனை வாகன யோகம் உண்டாகலாம். பல விதமான ஸ்தலங்களுக்குச் சென்று தெய்வ பலம் பெறுவார். பெண்களால் லாபம் உண்டாகலாம். தாயார் மற்றும் தாயார் வழி உறவில் நல்ல பலன்கள் ஏற்படும். ஜாதகருக்கு முழங்கால் பிடிப்பு, கீல்வாதம் போன்ற வாயு சம்பந்தப்பட்ட தொல்லைகள் ஏற்படலாம்.
ஜெனன கால ஜாதகத்தில் சந்திரன் பலவீனப்பட்டு இருந்தால் மேற்சொன்ன பலன்களுக்கு எதிர்பலன்கள் ஏற்படும்.
பரிகாரம்:
சந்திரனை தினமும் தியானம் செய்வது. எப்போதெல்லாம் சந்திரன் தெரிகிறாரோ அப்போது அவரைப் பார்த்து தியானம் செய்வது.
முத்து அணிவது (மோதிரமாகவோ அல்லது மாலையாகவோ)
சொல்ல வேண்டிய மந்திரம்:
ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்
No comments:
Post a Comment