Wednesday, October 17, 2012

திருமணப் பொருத்தம் - பாகம் ஒன்று

”திருமணப் பொருத்தம்" என்பது கணவன் மனைவியாக இணையும் இருவருக்கும் மன ஒற்றுமை, மகிழ்ச்சி, இன்பமான தாம்பத்திய உறவு, சந்தானபாக்கியம், சுபிட்சமான எதிர்காலம், வீடு, மனை, நிலம் போன்றவை அமையுமா என இருவருடைய ஜாதகங்களின் உள்ள கிரகங்களின் ஆதிக்கத்தைக் கொண்டு கணித்து கணிப்பது.


விவாகப் பொருத்தம் பார்க்கும் பொழுது மணமகன், மணமகள் ஆகிய இருவருடைய ஜாதகங்களிலும், பிறந்த நட்சத்திரங்களை வைத்து தச வித பொருத்தங்களும், ஜாதக-கிரக நிலையை கொண்டு கிரக-தோஷங்களும் பார்த்து திருமணப் பொருத்தம் முடிவு செய்யப்படுகின்றது.

இன்பமான குடும்ப வாழ்க்கைக்கு; மனப் பொருத்தம், புரிந்துணர்வு, அன்பு , பெருந்தன்மை, பரஸ்பர நம்பிக்கை, சந்தானபாக்கியம், மகிழ்ச்சியான  வாழ்க்கை, அதிர்ஷ்டம் ஆகியன அடிப்படைத் தேவைகளாகும். இவற்றுடன் தோஷங்கள் இல்லாமல் அமையப் பெற்றவர்களின் குடும்ப வாழ்க்கை ஆயுட் காலம் வரை மகிழ்ச்சியாக இருக்கும் என்பது அனுபவ உண்மை.

எனவே திருமணத்திற்கு மன(காதல்) பொருத்தமும், ஜாதகப் பொருத்தமும் மிக முக்கியமானதாகும். கிரகப் பொருத்தம் இல்லாத மன பொருத்தம் தற்காலிகமானது. காலப் போக்கில் கிரகநிலை மற்றங்களினால் மனம் மாற்றமடைந்து குழப்பங்கள் ஏற்படலாம். ஆதலினால், நீடித்த மகிழ்ச்சியான தி்ருமண வாழ்க்கையை உறுதி செய்வதற்கு "ஜாதகப் பொருத்தம்" மிக கட்டாயமாகின்றது.

நாங்கள் திருமணப் பொருத்தம் பார்க்கும் முறைகள்:

[1] நக்ஷத்திரப் பொருத்தம் - இருவருடைய நக்ஷத்ரம் மற்றும் லக்னத்தை வைத்துப் பார்ப்பது.
[2] திசாப் பொருத்தம் - இருவருக்கும் நடக்கும் திசையை வைத்து பார்ப்பது.
[3] பாப ஸாம்யப் பொருத்தம் - இருவருடைய ஜாதகங்களிலும் உள்ள பாவங்களை கணக்கிடுவது
[4] தோஷங்கள் - செவ்வாய் தோஷம், நாகதோஷம் போன்றவற்றை கணக்கிட்டுப் பார்ப்பது.

தொடரும்.....
 

குறிப்பு:
திருமணப் பொருத்தம் பார்ப்பதற்க்கு எங்களுக்கு மெயில் செய்யவும்.

அதற்குண்டான காணிக்கை - ரூபாய்.50/- மட்டுமே.

 

No comments: