Monday, October 22, 2012

கந்தர் சஷ்டி விரதம் - பாகம் மூன்று

உபவாசம் என்றால் என்ன?

உபவாசம் என்றால் விரதம் காப்பது என்பது ஒரு பொருள்.


 விரதமிருந்து கடவுளோடு வாசம் செய்வது என்பது மற்றொரு பொருள்.

எனவே ‘உபவாசம்’ என்பது விரத வழிபாடு. குறிப்பிட்ட நாள் அல்லது நாள்களில் விரதமிருந்து, மனம், மொழி, செயல்களால் கடவுளை இடையறாமல் வழிபட வேண்டும். 

கந்தர் சஷ்டி விரதம்:

முன்னர் கூறியபடி ஐப்பசி மாதம் வளர்பிறைப் பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்களும் விரதத்தை அனுஷ்டிப்பது கந்தர் சஷ்டி விரதம். இது மிகவும் கடுமையான விரதம். ஆனாலும் கந்தனது அருள் எல்லையில் அடியார்களைக் கொண்டு சேர்க்கும் விரதம்.

ஆறு நாட்களும் விரதமிருக்க முடியாதவர்கள் ஆறாம் நாளான சஷ்டியன்று மட்டும் விரமிருக்கலாம். ஆறாம் நாள் இரவில் அனைவரும் உறங்கக்கூடாது. பகல் நேரங்களிலும் உறங்கக்கூடாது. முருகனது திருத்தலங்கள் பலவற்றில் அவனது வாகனமான மயில்கள் இருப்பதைக் காணலாம். இவையும் கந்தசஷ்டியின் ஆறு நாட்களும் விரதமிருக்கிறது என்பதனை நாம் சொல்லவும் வேண்டுமா? 

கந்தர் சஷ்டி விரத வகைகள்:

தொடரும்....

No comments: