Thursday, October 18, 2012

கந்தர் சஷ்டி விரதம் - பாகம் ஒன்று

”சஷ்டியை நோக்க சரவணபவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்” என்று ஆரம்பிக்கும் கந்த சஷ்டி வரிகள் நம் அனைவருக்குமே தெரிந்திருக்கும். 




பொதுவில் தினமும் நாம் பாராயணம் செய்வதற்காகவும் அதிலும் முக்கியமாக சஷ்டி தினத்தன்றும் செய்வதற்காகவே தேவராய ஸ்வாமிகளால் பாடப்பட்ட நூல் கந்தர் சஷ்டி கவசம்.

”சஷ்டியை நோக்க சரவணபவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்” 

பொருள்: சரவணப் பொய்கையில் அவதரித்த முருகப் பெருமானுக்குரிய சஷ்டி விரதத்தை மேற்கொண்டால் செந்நிறக்கதிர்களை வீசும் வேலுடைய வேலன் அடியார்களுக்கு சஷ்டி விரதப் பலன்களைக் கொடுப்பார்.

முருகனுக்குரிய விரதங்கள்:

[1] வார   விரதம்
[2] கார்த்திகை விரதம்
[3] சஷ்டி விரதம்

என மூன்று வகையாக நாம் பிரிக்கலாம். 

வார விரதம்:

இது வெள்ளிக்கிழமையோ அல்லது செவ்வாய்கிழமையோ அடியார்களால் அனுஷ்டிக்கப்படும் விரதம். அன்றைய நாளில் முருகனை மனதார வழிபட்டு விரதம் இருக்க வேண்டும். இந்த இரண்டு நாட்களும் முருகனுக்கு உகந்த விரத நாட்கள் ஆகும். 

கார்த்திகை விரதம்:
முருகனுடைய நக்ஷத்ரம் கிருத்திகை ஆகும்.
 
 இதை சிலர் கிருத்திகை விரதம் என்றும் சொல்வார்கள். கார்த்திகை மாதம் வரும் கிருத்திகை நக்ஷத்திரத்தன்று இந்த விரதத்தை நாம் தொடங்க வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு மாதம் வரும் கிருத்திகையன்று விரதம் கடைபிடிப்பது முறை. இதை நாம் ஒரு வருடத்திற்கு கூட கடைபிடிக்கலாம். இது முருகனுக்குரிய நக்ஷத்திர விரதமாகும்.

சஷ்டி விரதம்:

தொடரும்....
 

1 comment:

Anonymous said...

My sis instructed me about your web site and the way great it is. She's right, I am actually impressed with the writing and slick design. It appears to me you're simply scratching the floor in terms of what you may accomplish, however you're off to an ideal begin!