Tuesday, November 6, 2012

பாடல்களில் வரும் சிறப்புச் சொற்கள் - பாகம் ஒன்று

கேள்வி: ”முத்தைத்தரு பத்தித் திருநகை”  - என்ற திருப்புகழ் பாடலில் வரும் “முப்பத்து மூவர்க்கத் தமரரும் அடிபேண” என்ற அடியில் பொதிந்துள்ள 33 பேர்கள் யாரென்று கூற முடியுமா?

பதில்:


பாடல்:

முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்திக் குருபன் – எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்முற்பட்டது கற்பித் திருவரு
முப்பத்துமு வர்க்கத் தமரரு – மடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியி – விரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வது – மொருநாளே

தித்தித்தெய வொத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு – கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகு தொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக – எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை  குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென – முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல – பெருமாளே.



அஷ்டவசுக்கள், 11 உருத்திரர்கள், 12 ஆதித்தர்கள், இந்திரன் மற்றும் பிரஹஸ்பதி ஆக முப்பத்து மூவர்கள்.

No comments: