Tuesday, November 6, 2012

திருப்பதி வேங்கடவானன் சன்னதிக்கு 2 வாசல்கள் வைக்க ஆலோசனை

செய்தி: 

திருப்பதி ஏழுமலையான் கர்ப்பகிரகத்தில் இரண்டு வாசல்கள் வைக்க ஆலோசனை செய்துவருவதாக திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் சனிக்கிழமை தெரிவித்தார்கள். தரிசனம் செய்வதற்காக, கர்ப்பகிரகத்துக்கு முன் உள்ள குலசேகரபடியில் வலப்பக்கம் மற்றும் இடப்பக்கம் என இரண்டு வாசல்களை வைக்க ஆலோசனை செய்யப்படுகிறது. 

ஏழுமைகின் ஒன்றும் ராஜோபுரம் பொன்னாலான ாமை விமானும் கொடி மும் எனார்த்ாலே புண்ணியத்ை அருளும் ிருப்பி பம் (பழைய படம்)

அப்படி இரண்டு வாசல்கள் வழியாக பக்தர்கள் அனுமதிக்கும்போது, நாள்தோறும் குறைந்தபட்சம் 70 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை  நிதானமாக தரிசிக்க ஏதுவாக அமையும். மேலும் இரு வாசல்கள் அமைப்பது தொடர்பாக வேதாகம பண்டிதர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுப்பிரமணியம் மேலும் தெரிவித்தார்.

பதில்:


 
பிரம்மோற்ஸவத்தின் போது எடுக்கப்பட்ட ராஜகோபுரம் போட்டோ


மக்களின் பயன்பாட்டிற்காக கர்ப்பகிரகத்தில் 2 வாசல்கள் வைப்பதற்கு ஆலோசனை செய்யப்பட்டிருப்பதாக திரு.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். ஆகம விதிப்படி இன்று வரை எந்த ஒரு விஷயத்தையும் மாற்றாமல் சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றி வரும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நம்முடைய மனமார்ந்த ஆசீர்வாதங்கள். நன்று. ஆனால் இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனை ஒரு வாசலை இரு வாசலாக்கலாமா? நம்முடைய கருத்து கூடாது என்பதுதான். இதற்கு ஆகம விதிகளில் இடமில்லை. மேலும் சயனம் கொண்ட பெருமாளுக்கு மட்டுமே ஒன்றுக்கும் மேற்பட்ட வாசல்கள் வைக்க ஆகம சாஸ்திரங்கள் அனுமதிக்கின்றன. உதாரணம்: திருவனந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி திருக்கோவில். அதுவும் எதற்காகவென்றால் பெருமாளை முழுமையாக நாம் தரிசிப்பிதற்காகவே இந்த வாசல்களை ஆகமங்கள் அனுமதிக்கிறது. நின்றிருக்கும் கோலத்தில் வரும் பக்தர்களுக்கெல்லாம் அருளை வாரி வழங்கும் வள்ளல் பெருமான் ஆலயத்தில் இது போன்று ஆகமங்களுக்கு ஒவ்வாதவை அவனருளால் நடைபெறாது என நம்புவோமாக.

1 comment:

Anonymous said...

மிக நல்ல செய்தி சொன்னீர்கள் அய்யா நன்றி.